Saturday, June 27, 2009

எனக்கு மட்டும் ஏன் இப்படி???


இன்னிக்கு எனக்கு ward posting.என் கூட ஜனனியும் சுகன்யாவும்.....காலைல 8.30 மணிக்கு wardல இருக்கனும்...break fast சாப்பிடாம அங்க போய் canteenல தயிர்வடை சாப்பிடலாம்கிற நினைப்புல கிளம்பிட்டேன்...இன்னைக்கு ward incharge dr.RR...

அங்கப்போய் நாங்க ஸெட்டிலான 15 நிமிஷத்துல எங்க batch பசங்க இரண்டு பேர் வந்து சேர்ந்தாங்க....இவங்கள உட்கார வச்சிட்டு நாம போய் தயிர் வடை சாப்பிடலாம்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ள அதுல ஒருத்தன் வந்து, நாங்க கொஞ்சம் வெளில போறோம், ஸார் கூப்பிட்டா call பண்றியான்னு கேட்டான்....நான் பசி,கோபம் எல்லாம் கலந்து அவன பார்க்க ஆள் எஸ்ஸாயிட்டான்.....

ஒரு 5 நிமிஷத்துக்கப்புறம் எங்கள கூப்பிட்டார் RR...ஒரு case sheet ஜனனிக்கிட்டயும் சுகன்யாகிட்டயும் கொடுத்து CT scan பண்ண பேஷன்ட பணம் கட்டி விட்டு கூட்டிட்டு போக சொன்னார்....என்கிட்ட ஒரு case sheet கொடுத்து பேஷன்ட ENT opinion வாங்க கூட்டிட்டு போக சொன்னார்...registration deskம் ENT departmentம் பக்கம்...அதனால நான் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் just 2 min வேலைதான் சீக்கிரம் வந்துடலாம்கிற நினைப்புல அவங்களுக்கு ஜாலியா டாடா காட்டிட்டு போனேன்.....

ENT department போய், அங்க பாவமா இருந்த ஒரு PG கிட்ட case sheetஅ நீட்டினேன்...(இதுவரைக்கும் எல்லாம் ஸ்மூத்தா தான் போச்சு....)அவர் case sheet பார்த்துட்டிருந்தார்.இந்த கேஸ் CA tongue ( cancer )....அவர் பக்கத்துலயிருந்த இன்னொரு PG திடீர்னு இவர்கிட்ட,ஏன்டா நம்ம OPல தான் radiotherapy இல்லயே பின்ன இந்த பேஷன்டுக்கு என்ன பண்ண போறாங்கன்னு கேட்டார்...( ஏன் இப்படி???உங்க GKவ வளர்க்க இதுவா நேரம்???) உடனே இவர் என்ன பார்த்தார்..(அட ஜீவன்களா....5 நிமிஷத்துக்கு முன்னாடி தான் இந்த case sheet என்கிட்ட வந்துச்சு...மத்த்ப்படி எனக்கு இதப்பத்தி எனக்கு வேற எதுவும் தெரியாது....)இன்னொரு PG உடனே,"what is the treatment plan for this case?" ( அடடா...ஆரம்பிச்சிடாய்ங்களே)...."இது ENT 2...ஆனா நீங்க போன தடவை ENT 1 கிட்ட opinion வாங்கியிருக்கீங்க.அதனால நாங்க இப்ப பாக்க மாட்டோம்....நீங்க ENT 1 தான் பாக்கனும்" ...."ஸார்...நான் எங்க department PGய வர சொல்றேன்..நீங்க அவர்கிட்ட கேளுங்க..இந்த கேஸ நான் handle பண்ணல",இது நான்.......

RR," அவங்க கிட்ட சொல்லு.ENT1 opinion வாங்கினது posterior extension of the lesionக்கு ENT2 opinion வாங்கினது hoarseness of voiceக்கு..." ( அய்யா...இத நீங்களே வந்து சொல்லிடலாமே....நான் என்ன messenger serviceஆ)...நான் இதயே ENT PGகிட்ட சொல்ல,அவர் உடனே எனக்கு தெரியாது நீங்க chiefஅ பாக்கனும்னு சொல்லிட்டார்...நான் மறுபடியும் RRக்கு கால் பண்ணி வர சொன்னேன்....அவர் வந்தவுடன்,அந்த ENT PG எங்க PGகிட்ட ஏதோ அவங்க என்கிட்ட எதுவுமே கேட்காத மாதிரியும்,நான் சும்மா 'ல்லுல்லாய்'க்கு அவர வர சொன்ன மாதிரியும் ஒரு பிட்ட போட்டாங்க...(அய்யா....ஏன்ய்யா இப்படி????பாவமா இருக்கற புள்ளைய இப்படியா பந்தாடறது????...)அப்புறம் எங்க PG என்னை மொறைக்க.....நான் அவரை மொறைக்க.."உன் வேலைய நீங்களே பார்த்திருந்தீங்கனா இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா???ஏன் உங்க வேலைய என்கிட்ட கட்டிவிட்டு என்னை அலைய விட்டீங்க"ன்னு நல்லா கேட்டேன்.....(எல்லாம் மைன்ட் வாய்ஸ் தான்ப்பு......சத்தமா கேட்டா சும்மா விடுவாய்ங்களா......)

அப்புறம் நாங்க எங்க departmentக்கு வர canteenல் தயிர் வடை முடிந்தது என்ற முக்கிய செய்தி அதை சாப்பிட்டு முடித்துவிட்டு வந்தவர்கள் மூலம் என்னை வந்தடைய....OH.....எனக்கு மட்டும் ஏன் இப்படி?????


(இது நான் என்றோ எழுதியது.....draftsலிருந்து தூசு தட்டி இப்ப publish பண்றேன்....)

Saturday, June 20, 2009

தந்தை நீயே....என் தோழனும் நீயே.....


இருண்ட கானகத்தில்
நான் வழி தவறி தடுமாறுகையில்
கைப்பிடித்து அழைத்து செல்லும்
கரங்கள் உனது.....


7th std முடிஞ்சு வந்த annual leave......ஒரு நாள் எங்க அப்பா என்ன கூப்பிட்டாங்க.
"பாப்பா....எங்க அப்பா இறந்தப்போ எனக்கு உன் வயசு தான்.நானும் உன்ன மாதிரி கவலையே தெரியாம தான் இருந்தேன்.ஆனா எங்க அப்பா போனதுக்கப்புறம் எல்லாமே மாறி போச்சு.....ரொம்ப கஷ்டப்பட்டோம்.நாங்க ஆறு பிள்ளைங்க.உன் பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டாங்க......இந்த மாற்றத்தை நாங்க யாருமே எதிர் பார்க்கல.இப்ப நான் உனக்கு சொல்றேன்......எப்பவேனாலும் எதுவேனாலும் நடக்கலாம்...அம்மாவும் தம்பியும் என்ன பண்ணுவாங்க???நீ தான் அவங்கள பாத்துக்கனும்.நல்லா படி.நல்ல நிலைமைக்கு வா.நீ உன்னயும் பாத்துக்கனும்,அவங்களையும் பாத்துக்கனும்.....வாழ்க்கைய எப்போதுமே ஈஸியா பாக்காதே........ "
இத ஏன் திடீர்னு கூப்பிட்டு சொன்னாங்கன்னு தெரியல....ஆனா இந்த வார்த்தைகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்...

நான் முன்னல்லாம் எங்கப்பாக்கிட்ட அதிகமா பேசக்கூட மாட்டேன்.....ஆனா இந்த ஒரு வருஷமா எங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு ஏற்பட்டிருக்கு.அதுக்கு நான் சில பேருக்கு நன்றி சொல்லனும்.....அவங்க இல்லைனா எங்க நட்பும் இல்லாம போயிருக்கும்.....(குழப்பறேனோ???ஸாரி guys.....ஆனா எங்க அப்பாவுக்கு கண்டிப்பா புரியும்)

எங்கப்பாக்கிட்ட என்ன வேனும்னாலும் பகிர்ந்துக்கலாம்.....என்கிட்ட அவன் ப்ரபோஸ் பண்ணான் ஆனா எனக்கு பிடிக்கல என்பது உட்பட...he's such a friendly person....எங்கப்பா எனக்கு மட்டுமல்ல என் ப்ரென்ட்ஸுக்கும் ப்ரென்ட்.....

தொலைபேசியில் கேட்கும் என் குரல் மாற்றத்திலேயே என் சோகங்களை புரிந்து கொள்ளக்கூடிய ஜீவன்......என் எண்ணங்கள் புரிந்து என் நிலைக்கு இறங்கி வந்து விளக்கும் ஜீவன்.....என் திறமைகளை வளர்த்த ஜீவன்......இப்படி ஒரு தந்தை எனக்கு கிடைத்ததற்கு எல்லா புகழும் இறைவனுக்கே...........

இந்த வலைப்பக்கத்துலக்கூட பாக்கலாம்....என் பதிவுகள விட எங்கப்பாவோட பின்னூட்டங்கள் ரொம்ப நல்லாருக்கும்.......

dad i love you.............you are The Best.......





Tuesday, June 16, 2009

நிதர்சனமும் சில நிராசைகளும்....


செய்ய வேண்டிய வேலைகள்....
 காத்திருக்கும் பொறுப்புகள்....
பொறுமையிழக்கும் சில சில்லறை நிமிடங்கள்....
அழவைக்கும் சிலரின் சொல்லாயுதங்கள்.... 
நிறைவேறாது வருத்தும் ஆசைகள்....
மனிதம் தொலைத்த மனிதர்கள்....
அத்தனையும் மறந்து,
கவலை துறந்து
விண்ணில் பறக்க மனம் விழைகிறது.....
நிதர்சனமோ கூடை பொறுப்புகளால்
கூண்டில் அடைக்கிறது....

Monday, June 8, 2009

the taste of singapore 2

அங்க ஒரு விஷயம் என்னான்னா இந்த மாதிரி bird park, zoo எல்லாத்தையுமே இயற்கையா ஒரு காடு எப்படி இருக்குமோ அப்படியே maintain பண்றாங்க....நமக்கும் ஒரு காட்டுக்குள்ளே போற feel கி்டைக்குது...கையில map வச்சிட்டு நாம ஜாலியா நடந்து சுத்தி பாக்கலாம் (கால் லைட்டா வலிக்கும்...ஆனா அதல்லாம் பார்த்தா enjoy பண்ண முடியாதே...singaporeலேர்ந்து வந்து இரண்டு நாளுக்கு அப்புறம் தான் கால் வீக்கம் எனக்கு போச்சு)........உள்ள tram இருக்கும்.அதிலயும் பயணி்க்கலாம்.ஆனா அதில மேலோட்டமாதான் பார்க்க முடியும்.........எல்லா இடங்களிலும் interactive shows செய்கிறார்கள்..மிருகங்கள் நம் பக்கத்துலேர்ந்து வெளிப்பட்டு போறது த்ரில்லாயிருக்கும்.....இந்த மிருகங்களுக்காக நாம காடுகள பாதுகாக்கனும்னு தோனும்......

Jurong bird park.....நிறைய species of birds இங்க உண்டு....walk in aviaries உண்டு.....feeding time சமயம் நாமும் உணவூட்டலாம்.....

walk in aviaries
parrots....

flamingoes......

majesticஆ ஒரு லுக்.....




night safari.....the most thrilling of all.....ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு...காட்டு வாசி டான்சும் பார்த்தோம்...சிங்கம், மான்,சிறுத்தையெல்லாம் இருட்டுல பக்கத்துல பாக்க த்ரில்லா இருந்துச்சு.....அந்த சிறுத்தை கண்ணாடி தடுப்புக்கு பிண்ணாடி உறுமிட்டு இருந்துச்சு.அது பக்கத்துல முகத்த வச்சி் பார்த்தப்போ உள்ளுக்குள்ள அவ்வளவு பயம்........( ஆக்சுவலா அப்ப 'கண்கள் இரண்டால்' பாட்டு BGMல ஒலிச்சு்ருக்கனும்....மிஸ்ஸாயிடுச்சு...)
 
zooல இருந்த வெள்ளை புலியோட பேரு உமராம்.....அதனால என் தம்பி்யோட அளப்பறை தாங்க முடியல.....





Sentosa island.....இது ஒரு செயற்கை தீவு...ரோடு வழியாவும் போகலாம் cable carலேயும் போகலாம்.....underwater world அங்க இருக்கு...அதாவது தண்ணிக்குள்ள ட்யூப் போட்டிருப்பாங்க...நாம அதுக்குள்ள நடந்து கடல் வாழ் உயிரிணங்கள பார்க்கலாம்......beach, dolphin show, laser show, 3D show, 3D rides, luge ride இப்படி பல entertainment விஷயங்கள் நிறைஞ்ச தீவு.....

cable carல போறப்போ காட்டுக்குள்ள இந்த வீட பார்த்தேன்......


sea horse மாதிரி ஓன்னு.....ஒரு வேள ஒன்னு விட்ட கஸினோ???

sea dragon.....


jelly fish.....


tas n snake.......... 

my bro.......



அந்த ஊர் சாப்பாட்டை பத்தி நான் சொல்லவேயில்லையே........little Indiaலயும் மத்த இடங்கள்லயும் இந்திய உணவுகள் கிடைக்கும்தான், ஆனால் எந்த ஊருக்கு போறமோ அந்த ஊர் பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டாதான் பயணத்தை முழுமையா அனுபவிச்ச மாதிரி......அங்க நிறைய sea foods கிடைக்கும்.அதைதான் அந்த மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்....அதையும் சீனர்கள் chop stickல் சாப்பிடும் அழகே தனி...அத மாதிரி சாப்பிட try பண்ணா வாய்க்குள்ள வெறும் chop stick மட்டும் தான் போய்டு போய்டு வந்தது,சாப்பாடு போகல......mee goring ன்னு ஒரு noodles dish அதுல sea foods சேர்த்து அருமையா இருந்தது....அத மாதிரி அங்க துரியன் பழமும் பிரசித்தம்.ஆனா அதோட வாசனை பயங்கரமா இருக்கும்.அதனாலயே அந்த பழத்தை பஸ்லயோ இரயில்லயோ எடுத்துட்டு போக கூடாது.......

 
சிங்கப்பூர்ல இன்னொரு noticable thing என்னன்னா மலாய்,சீனர், இந்தியர் எல்லோரும் எந்தவொரு வேறுபாடும் இல்லாம பழகுறது...அருமையான சமத்துவம்......


இப்படி எங்களோட ஒரு வாரம் பயணம் ரொம்ப ஜாலியா போச்சு.....இங்க இன்னொரு வி்ஷயம் கண்டிப்பா சொல்லனும்.....எங்களை air portலேர்ந்து கூட்டிட்டு போனதுலேர்ந்து ஒரு வாரமும் எங்கள நல்லா கவணிச்சு திரும்ப air portல விடற வரைக்கும் excellent hospitality provide பண்ண Rafik அங்கிள்..ஸாரி ஸாரி அங்கிள் சொன்னா கோச்சுப்பார்.....Rafik annan family.......அதுவும் அவங்க வீட்டு வாண்டுங்க so sweet.....அந்த குட்டீஸை விட்டு வர்றது ரொம்ப கஷ்டமா இருந்தது :((........அப்புறம் kafur atha family, mami family  எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப thanks......... :))) 

nadhira, tas n erina........  



nadhira, tas n afnan



erina..........