Monday, April 20, 2009

IPL......




இந்த... ஐ...பி...எல்..

அன்று...
தென் ஆப்பிரிக்காவில்
இந்தியனுக்கு பாதுகாப்பு இல்லை..
ரயில் நிலையத்தில் தூக்கி வீசப்பட்டான்..
காலணியால் மிதிக்கப் படடான்..
இந்தியா சுதந்திர நாடானது..!!!

இன்று...
இந்தியாவில்
இந்தியனுக்கு பாதுகாப்பு இல்லை..
தீவிரவாதமாம்.. தேர்தலின் போது பாதுகாப்பு சிக்கலாம்..
இந்தியா...? சுதந்திர நாடா..இது..?

சுதந்திரம் என்பதற்கும்..
அடங்க மறுப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை
இந்தியனே நீ எப்போது புரிந்து கொள்வாய்....

- abuvaalu

(இது என் தந்தை எழுதியது.....)

atha.....itz simply superb........mashallah......

Thursday, April 16, 2009

சத்தமின்றி சிந்தப்படும் உயிர்கள்.....



அவன் கடமை
பணி செய்து கிடப்பதே....
அவனுடன் வேலைப் பார்க்கும்
பலநூறு பொச்சம் பொறுக்குவோரில்
அவனும் ஒருவன்.

அவனுக்கு தாய் ஒன்றுதான
ஆனால் தந்தையர் பலர்....
உடனிருக்கும் அனைவரும் ஒரு தாய் மக்கள்
தாயே ஆட்சி செய்யும் ராணி
ஆனாலும் அவன் இளவரசனில்லை.

அன்று விடிந்ததோ வழக்கம் போல
ஆனால் முடிந்தது என்னவோ
அன்று மட்டும் வித்தியாசமாய்....
என்றைக்கும் போல்தான்
புறப்பட்டான் அவனும் கடமையை செய்ய.

வரிசையிலேயே சென்று பழக்கப்பட்டவன்
சுறுசுறுப்பானவன்,தீவிர முயற்சியுடையான்
எதிர்புறம் வருவோரையெல்லாம் நலம்
விசாரிக்கும் நற்பண்புடையான்...
கடமையே கண்ணாய் முன்னேறிக் கொண்டிருந்தான்.

பொச்சத்தின் வாடை அலைவரிசையாய் தாக்க
தூண்டப் பட்ட புலண்களுடன் நகர்ந்தான் பக்கம்...
தன் ஐந்தறிவில் ஏதோ ஒன்றால்
தன் இரையை உறுதி செய்தான்;
சகோதரர்களுக்கும் தெரியப்படுத்தினான்.

அவர்களும் வந்தனர்;மகிழ்ந்தனர்;
தங்களுக்குள் ரகசியங்கள் பேசினர்...
ஆனந்தமாய் உண்ணலாம்
சேமித்து வைக்கலாம் என பேசியபடியே
உணவில் வாய் வைத்தனர்.

உண்ட சிறிது நேரத்தில்
சில பல மாற்றங்கள்....
ஆங்காங்கே சுருண்டனர்;துடித்தனர்;
கண் முன்னே மரிக்கும் தம் உறவுகளைக் கண்டான்
அவனுக்குத் தெரியும் தன் முடிவும் அதுதானென்று.

விஷம் வைத்துக் கொல்ல பட்ட
அந்த நூறுக்குள் அடங்கிய பேர்களுள்
அவனும் ஒருவன்....
செய்திகளில் வரவும் இல்லை
யாரும் இரங்கல் தெரிவிக்கவும் இல்லை
சத்தமின்றி சிந்தப்பட்ட அவ்வுயிர்கள்
என்றும் கணக்கில் எடுக்கப் பட்டதுமில்லை....
( இது கலாட்டா அம்மணி அழைத்திருந்த கவிதை தொடர் பதிவிற்காக....யாரை அழைக்கலாம் என்று குழப்பம்.அதனால் இப்பொழுது யாரையும் அழைக்கவில்லை )

Monday, April 13, 2009

happy birthday brother!!!!!

( ஒரு காலத்துல இப்படி தான் இருந்தான்...............)



என் அருமை உடன்பிறப்புக்கு பிறந்த நாள்......அன்னைக்கு தமிழ் புத்தாண்டாவும் இருக்கறதுன்னால, என் பிறந்த நாள ஊரெல்லாம் கொண்டாடுதுன்னு ஸீன் போட்டுட்டிருந்தான்....இப்ப கலைஞர் அதுக்கு ஆப்பு வச்சுட்டாரு....
என்னை மாதிரி ஒரு அக்காவிற்கு இப்படி ஒரு தம்பியான்னு நிறைய பேர் ஆச்சரியப்பட்டிருக்காங்க.....ஏன்னா நான் அவ்வளவு அமைதி,அடக்கம்.......அட நெசமாத்தான் சொல்றேன்.....ஆனா அய்யா, எனக்கு அப்படியே உல்டா......எங்களுக்குள்ள ஒரு பெரிய வித்தியாசம் என்னன்னா.....நான் பெரிய தவறெல்லாம் அமைதியா செஞ்சு எஸ்கேப்பாயிடுவேன்..அவன் சின்ன தப்பையும் பெருசா செஞ்சு மாட்டிப்பான் ;)))

நாங்க ஒன்னும் பாசமலர் சென்டி டைப் இல்லை.....சண்டை,கோபம்ன்னு sibling rivalry எங்களுக்குள்ள full formல இருக்கும்....இப்ப கொஞ்சம் பரவாயில்லை......


நான் 6 th படிக்கற வரைக்கும் அவன் பிறந்த நாளைக்கு ஸ்கூலாகவும் என் பிறந்த நாளைக்கு லீவாகவும் இருக்கும்.அப்ப நானும் அவன் கூடவே சாக்லேட் கொடுத்துடுவேன்....7 th லேர்ந்து அப்படியே உல்டாவாச்சு.அவன் என் பிறந்த நாளைக்கு சாக்லேட் கொடுக்க ஆரம்பிச்சான்....எப்பவும் எங்க இரண்டு பேருக்குமே புது டிரஸ்.....இப்படி பல mutual benefits share பண்ணியிருக்கோம்.......




ஒரு காலம் வரைக்கும் என்னை விட கட்டையா தான் இருந்தான்.....இப்ப நான் அவன் தோள் அளவுக்கூட இல்லை.....என் கைய பிடிச்சிட்டு பாவமா வந்த காலம் போய் இப்ப எனக்குத் துணையா வந்திட்டிருக்கான்......




எனக்கு அண்ணன் இல்லையேன்ற ஏக்கம் அதிகம்...ஆனா இப்ப யோசிக்கிறப்போ அண்ணா இருந்திருந்தாகூட என் தம்பிக்கூட இருக்கும் அளவு ஜாலியா இருந்திருப்பேனான்னு தெரியல.......




i'm proud to be your sister.I pray to Almighty to grant you happiness and make you prosperous both in this life and the herafter............happy birthday da............

(இப்போ இப்படி ஆயிட்டான்........................)