
நம்ம கலாட்டா அம்மணி நம்மள பழமொழிகள் இடச் சொல்லி அழைச்சிருந்தாங்க.வர வர பாசக்கார எதிரிங்க தொல்ல தாங்க முடியலப்பா......யோசிக்கப் புடிக்காத நம்மள இப்படியா யோசிக்க வைக்கறது????!!!!ஆனா வகையா வந்து மாட்டின புத்தகத்திலிருந்து இதோ சில பழமொழிகள்.....................
அதிகாலை எழாதவன் வேலை அழுதாலும் தீராது
அற்பக் கோபத்தால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷத்தால் திரும்ப வருமா?
இட்டுக் கெட்டாருமில்லை,ஈயாது வாழ்ந்தாருமில்லை
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது
உண்டு கொழுத்தால் நண்டுவலை தாங்காது
உறவு போகாமல் கெட்டது;கடன் கேட்காமல் கெட்டது
எதிரி சுண்டெலியானாலும்,எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
எரிகிற வீட்டை அணைக்க கிணறு வெட்ட நாள் பார்த்தானாம்
கடன் இல்லாத கஞ்சி கால் வயிற்றுக்குப் போதும்
தன்னை வென்றான் தரணியை வெல்வான்
நான் இந்த பழமொழி பதிவை தொடர அழைப்பது இவர்களை தான்....................
அ.மு.செய்யது
mayvee
கவின்
ஜமால் காக்கா