Thursday, January 8, 2009

கணிணி கைதிகள்


பண்டிகையில் உறவுகளெல்லாம்

ஒன்றாய் மகிழ்ந்திருக்க

எங்கோ தூரத்தில்

தணியாய் நான்.......



பகலில் நன்பர்களெல்லாம்

சேர்ந்து களித்திருக்க

இரவில் மட்டுமே விழித்து

உழைக்கும் நான்......



ஹீரோ சர்ட், ரேமண்ட் சூட்

ரீபோக் ஷூ, ஆப்பிள் ஐபாட்

அனைத்தும் அலங்கோலமாய் கிடக்க

சோர்வுடன் நான்.......



முறுவல் தோசை, குழிப்பணியாரம்

மறந்துவிட்டது அம்மா கைப்பக்குவம்

நினைவில் இருப்பதெல்லாம்

லோக்கல் மெஸ்ஸும் ஆறிய சப்பாத்தியும்........



நான் இழந்த அனைத்தையும்

ஈடுகட்டி விடுமா

நான் வாங்கும்

ஐந்திலக்க ரொக்கம்????!!!!!

13 comments:

அ.மு.செய்யது said...

எங்களைப் போன்ற மென்பொருள் துறையினரின் புலம்பல் தான் இங்கு கவிதையாக...

நல்லா இருக்குங்க !!!!

anbudan vaalu said...

நன்றி sayed.....
:)))

அ.மு.செய்யது said...

ஒரு சின்ன விண்ணப்பம்..
உங்க பேரு "அன்புடன்வாலு" இன்னும் ஆங்கிலத்தில் வருகிறதே..அதை தமிழில் மாற்றினால் நலம் பயக்கும்.

anbudan vaalu said...

//அ.மு.செய்யது said...
ஒரு சின்ன விண்ணப்பம்..
உங்க பேரு "அன்புடன்வாலு" இன்னும் ஆங்கிலத்தில் வருகிறதே..அதை தமிழில் மாற்றினால் நலம் பயக்கும்//


ம்ம்ம்.....அதுல எனக்கு அவ்வளவா விருப்பம் இல்லை sayed....என்னவோ எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.....sorry :(((

அ.மு.செய்யது said...

ஆங்கிலத்தில் பெயர் வைத்ததால் உங்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ஹா ஹா .........!!!!!!!

anbudan vaalu said...

//அ.மு.செய்யது said...

ஆங்கிலத்தில் பெயர் வைத்ததால் உங்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.//

:)))

கலாட்டா அம்மனி said...

\\நான் இழந்த அனைத்தையும்
ஈடுகட்டி விடுமா
நான் வாங்கும்
ஐந்திலக்க ரொக்கம்????!!!!!\\

no never..


\\முறுவல் தோசை, குழிப்பணியாரம்
மறந்துவிட்டது அம்மா கைப்பக்குவம்
நினைவில் இருப்பதெல்லாம்
லோக்கல் மெஸ்ஸும் ஆறிய சப்பாத்தியும்........\\

வாலு, நமக்கு எப்படி? AP யும், SVS ice lemon tea யுமா?????????

anbudan vaalu said...

//வாலு, நமக்கு எப்படி? AP யும், SVS ice lemon tea யுமா?????????//

you are exactly correct ;))

பிரேம்குமார் said...

இந்த கவிதை வீட்டைப் பிரிந்து தனியே வேலை பார்க்கும் எல்லோருக்கும் பொருந்தும் தானே???

அதென்ன 'கணிணி கைதிகள்' என்று தலைப்பு :-(

anbudan vaalu said...

ஆமாம், எல்லாருக்கும் பொருந்தும் தான் ஆனால் பாதிக்கப்படுவது கணிணி வர்க்கம் தானே.......

ஜி said...

//பண்டிகையில் உறவுகளெல்லாம்
ஒன்றாய் மகிழ்ந்திருக்க
எங்கோ தூரத்தில்
தணியாய் நான்.......//

Best reflect of me...

//நான் இழந்த அனைத்தையும்
ஈடுகட்டி விடுமா
நான் வாங்கும்
ஐந்திலக்க ரொக்கம்????!!!!!//

ambuttu kodukuraaingala?? :O

anbudan vaalu said...

@ஜி

[//நான் இழந்த அனைத்தையும்
ஈடுகட்டி விடுமா
நான் வாங்கும்
ஐந்திலக்க ரொக்கம்????!!!!!//

ambuttu kodukuraaingala?? :O//]

;)) ஜி.....உங்க officeல தான் சொன்னாங்க......

Sundar said...

//நான் இழந்த அனைத்தையும்
ஈடுகட்டி விடுமா
நான் வாங்கும்
ஐந்திலக்க ரொக்கம்????!!!!!//


அதெல்லாம் ஆறிலக்க சம்பளம் வரும் வரை தோன்றும் விரக்தியின் அடையாளங்கள் :)